Sunday, September 18, 2011

இந்திய கடற்படையினர் கலந்துக்கொள்ளும் விசேட போர் பயிற்சிகள் இன்று

Sunday, September 18, 2011
இந்திய கடற்படையினர் கலந்துக்கொள்ளும் விசேட போர் பயிற்சிகள் இன்று திருகோணமலை கடற்பரப்பில் ஆரம்பமாகியுள்ளதாக தெரியவருகிறது. சிலிநெக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த கடற்படையின் போர் பயிற்சிகள் 6 நாட்களுக்கு நடைபெறவுள்ளன.

இந்த போர் பயிற்சியானது இலங்கையின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் பாரியளவிலான போர் பயிற்சி என இந்திய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர், டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை மற்றும் இந்திய கடற்படையினருக்கு சொந்தமான 4 கப்பல்கள் இந்த போர் பயிற்சியில் பயன்படுத்தப்பட உள்ளன.இலங்கையுடன் ராஜதந்திர மற்றும் இராணுவ ரீதியிலான ஒத்துழைப்புகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த கடற்படை பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment