Monday, September 19, 2011

றொபேட் பிளேக், தயவுசெய்து ஸ்ரீலங்கா மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்-செனாலி வடுகே!(2)

Monday, September 19, 2011
குவான்ட்டனாமோ பே மற்றும் டிகொ கார்சிகா ஆகியனவே அமெரிக்கா சிறைக்கைதிகளை வைத்திருக்கும் சில சிறைக்கூடங்களில் நன்கு அறியப்பட்டவை. அங்குள்ளவர்களின் உரிமைகள் மதிக்கப் படுவதில்லை. அவர்கள் குற்றச்சாட்டுகளோ, வழக்கு விசாரணைகளோ இன்றி காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளிலிருந்து தனியார் விமானங்கள் மூலம் சமுத்திரத்தைத் தாண்டி கவனமாகக் கொண்டுவரப்பட்டு யாருக்கும் தெரியாமல் இந்தச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்க அரசாங்கம் தெரிவிப்பது அவர்களை விடுதலை செய்யவோ அல்லது அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவோ முடியாது என்று. அப்படியான 3000 மேற்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் அங்குள்ளனர். சிறைக்கைதிகள் மீது பாலியல் வன்முறை பிரயோகிக்கப்பட்டது, வெளிப்பொருட்கள் மூலம் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டது, வாய்ப்பட்டிகள் அகற்றப்பட்ட நாய்களைப் பயன்படுத்தி கடிப்பிக்கச் செய்து பலத்த காயங்களுக்கு உட்படுத்தப்பட்டது. மற்றும் சாகும் வரை அடித்துத் துன்புறுத்தியது போன்ற சித்திரவைதைகளை பாக்தாத்தின் மேற்கேயுள்ள ‘அபு காரைப்’ சிறையில் மேற்கொண்டதாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. பெண் கைதிகள் தாங்கள் படும் அவமானங்களைச் சகித்துக்கொள்ள முடியாமல் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு விஷத்தைக் கடத்திக் கொண்டுவந்து தரும்படி தங்கள் உறவினர்களிடம் கெஞ்சினார்கள் என்றும் கூறப்பட்டள்ளது.

சித்திரவதை மற்றும் பிற கொடூரங்களான மனிதாபிமானமற்ற அல்லது தரக்குறைவான நடவடிக்கைகள் அல்லது தண்டனைகள் போன்றவற்றுக்கு எதிரான மாநாட்டில் உறுதி செய்யப்பட்ட சீ.ஏ.ரி (கற்) உடன்படிக்கைக்கு அமெரிக்கா ஒப்புதலளித்திருப்பதை பிளேக் மறந்து விட்டாரா. சித்திரவதை, மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள், மற்றும் உள்நோக்கோடு செய்யப்படும் கொலைகள் என்பன அமெரிக்கா ஒப்புதலளித்திருக்கும் ஜெனிவா மாநாட்டு உடன்படிக்கைக்கு எதிரான கடுமையான மீறல்கள். இத்தகைய மீறல்களையும் அமெரிக்காவின் 1996ம் ஆண்டின் யுத்தக் குற்றச்சாட்டுகள் சட்டத்தின் கீழ் யுத்தக் குற்றங்களாகக் கருத முடியும். அமெரிக்கப் பிரஜைகள் வெளிநாடுகளில் யுத்தக்குற்றம் புரிந்தால் பாதிக்கப்பட்டவர் மரணமடையும் பட்சத்தில் யுத்தக்குற்றம் புரிந்தவர் ஆயுட்கால சிறைத்தண்டனைக்கோ அல்லது மரண தண்டனைக்கோ ஆட்பட நேரும். ஆனால் எங்களுக்குத் தெரியும் சில அமெரிக்கர்கள் அமெரிக்க அரசாங்கம் தொடர்புபட்டிருக்கும் சித்திரவதை மற்றும் கொடூரச் செயல்களைப் பழித்துரைக்கிறார்கள் என்று –

300 சட்டவாளர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மற்றும் சட்டப் பேராசிரியர்கள், ஒரு முன்னாள் எப்.பி.ஐ பணிப்பாளர், ஒரு முன்னாள் சட்டமா அதிபர், அமெரிக்க சட்டக் கழகத்தின் முன்னாள் தலைவர்கள் ஏழு பேர்கள் கூடிச்சேர்ந்து அப்படியான ஒரு அறிக்கையில் ஒப்பமிட்டுள்ளார்கள். எப்படியிருந்தாலும் மொத்தத்தில் ஈராக்கில் ஒரு யுத்தம் நடக்கவில்லை – அது தவறான குற்றச்சாட்டுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு படையெடுப்பு – சதாம் ஒரு பயங்கரவாதியல்ல – முன்னர் அவர் ஒசாமா பின்லாடனைப்போல ஒரு அமெரிக்க உளவுத்துறை முகவர். அமெரிக்க ஊடகங்கள் இந்த உண்மைகளையெல்லாம் அமெரிக்க மக்களிடமிருந்து சாதுர்யமாக மறைத்தன. மற்றும் பொய்களை நம்பவைத்து வசியப்படுத்தும் ஒரு நாடாக அமெரிக்கா திகழ்கிறது.

சமத்துவம், சுதந்திரம், மற்றும் மனித உரிமைகள் உள்ள நாடு என்று தற்பெருமை பீற்றிக் கொள்ளும் ஒரு நாட்டில் 9ஃ11 சம்பவத்தைத் தொடர்ந்து அராபியர்கள், முஸ்லிம்கள் தெற்காசியர்கள் என்று சுமார் 1200 பேரைச் சுற்றி வளைத்தது பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள். காவற்துறை கண்காணிப்பாளர் நாயகத்தின் நீதித்துறை திணைக்கள அலுவலகத்தினால் தொகுக்கப்பட்ட ஒரு அறிக்கையின்படி, அமெரிக்க குடியுரிமையற்ற கைதிகளுக்கு உடல் மற்றும் வாய்வார்த்தைகளால் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் மேலும் மத்திய சிறைகள் பணியகம், மாநகர காவல் மையங்களிலுள்ள அலுவலர்கள் தடுப்புக்காவலில் இருந்தவர்களை சுவர்களுக்குள் நுழைத்து திருப்பியதாகவும், அவர்களின் கைகள், மணிக்கட்டுகள் அல்லது விரல்களை முறுக்கி அல்லது திருப்பி அவர்களது பெருவிரல்களை பின்னாலிருந்து இழுத்து வளைத்ததாகவும் மற்றும் அவர்களை தரையில் போட்டு இழுத்ததாகவும் அத்தோடு தகாத வார்த்தைகளால் திட்டி தவறாக நடத்தியதாகவும் கண்டறிந்துள்ளது. சுதந்திரமான நாடு என்று கூறப்படும் அமெரிக்காவில் இப்படியான செயல்கள் எப்படி நடக்கலாம்?

ஸ்ரீலங்காவுக்கு மாறாக இது உள்ளது. ஆம் எங்களிடம் எல்.ரீ.ரீ.ஈ எனக் கூறப்படும் ஒரு இயக்கம் இருந்தது. அது சிங்களவர்களுக்கு எதிராக மட்டும் போராடவில்லை, தமிழர்களிடத்தில் அது பெற்றுள்ள மதிப்பெண்களை வைத்தே அதை தெளிவாக நிரூபிக்கலாம். எல்.ரீ.ரீ.ஈ யின் கொலைவெறி யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவில் ஆரம்பித்து, தமிழ் அரசியல்வாதிகள், ஆசிரியர்கள்;, மதகுருமார், மற்றும் ஸ்ரீலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் உட்பட பலர் அதன் கொலைவெறிக்கு ஆளானார்கள். இந்த மிதவாத சிந்தனையுள்ள தமிழ் அரசியல்வாதிகளைக் கொல்வதன் மூலம் மற்றைய தமிழ் அரசியல்வாதிகளையும், எல்.ரீ.ரீ.ஈ உயிர்ப்பயத்துக்கு ஆளாக்குவதில் வெற்றி பெற்றிருந்தது, தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எல்.ரீ.ரீ.ஈ சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளை போல இருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. இதற்கு மேலதிகமாக எல்.ரீ.ரீ.ஈ என்ற குழு உண்மையில் அதன் பிரிவினைவாதம் என்கிற கருவை இலங்கைத் தமிழரசுக் கட்சி என்கிற அரசியற்கட்சியிடமிருந்துதான் கடத்தல் செய்திருந்தது (ஸ்ரீலங்காவில் ஒரு தனியரசை ஊக்குவிப்பதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி 1940 களில் ஆரம்பிக்கப்பட்டது). எல்.ரீ.ரீ.ஈக்கு ஒட்சிசன் வழங்கி உயிர் கொடுத்தது.

இப்பொழுது எமது நண்பர் என்று உறவு கொண்டாடும்; எமது சொந்த அயல் நாடான இந்தியாவேதான், மற்றும் இந்தியாவால் செயல்படுத்தப்பட்டதும் ஊககுவிக்கப்பட்டதுமான 30 வருடப் தீவிரவாதத்தை ஸ்ரீலங்கா மக்கள் மறந்து விடுவார்கள் என இந்தியா நினைக்கிறது. ஸ்ரீலங்காவால் மட்டும் தனியாக அதன் இறையாண்மையை உறுதி செய்ய முடியுமாக இருந்திருந்தால், இந்தியா ஒரு தேர்வாக ஒருபோதும் இருந்திருக்க முடியாது. நாங்கள் இந்தியாவை ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டோம். மற்றும்; இந்தியா எந்த வகையிலான இராஜதந்திர உறவுகளையோ, பொருளாதார உறவுகளையோ ஏற்படுத்திக் கொள்ள விரும்பினாலும் பெரும்பான்மை மக்கள் இந்திய - எல்.ரீ.ரீ.ஈ உறவுகளை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு இந்தியா மாறிவிட்டது என்று கூறப்படும் சமாதானத்தை ஏற்றுக்கொள்ள நாங்கள் ஒன்றும் அப்பாவிகள் இல்லை. ராஜீவ் இறந்தது, 1991ல் 20 வருடங்களுக்கு முன்பு ராஜீவ் மரணமான உடனேயே எல்.ரீ.ரீ.ஈ யினை அழிப்பதற்கான சக்தியும் திறமையும் இந்தியாவிடமிருந்தது. ஆனால் ஸ்ரீலங்காவுக்கு எதிராக எல்.ரீ.ரீ.ஈ யினைப் பயன்படுத்த இந்தியா முன்னுரிமை வழங்கவில்லை என்பது வெளிப்படுத்துவது இந்தியாவை ஒருபோதும் நம்பமுடியாது என்பதையே.

எல்.ரீ.ரீ.ஈயின் வீழ்ச்சி ஏற்பட்டது மே 2009லியே, இராணுவத்தினர் எல்.ரீ.ரீ.ஈயின் போராளிகளை சிறைப்பிடித்த அதேவேளை மற்றவர்கள் தங்களை முன்னெப்போதுமில்லாத இந்த மனிதாபிமான மீட்பு நடவடிக்கையில் தாங்களாகவே முன்வந்து தங்களை ஒப்படைத்துக் கொண்டார்கள். அந்தப் பெருந்தன்மையான நடவடிக்கையின் கணக்கில் மேற்கத்தைய நாடுகள் அதிர்ச்சியடைந்து நின்றன, அவர்களின் தற்காப்பு யாவும் அந்தப் பெருந்தன்மையான மீட்பு நடவடிக்கையில் உள்ள குறைபாடுகளைக் காண்பது மாத்திரமே. அந்த வேளையில் கொலை செய்வது அல்லது கொல்லும்படி ஆணை பிறப்பிப்பதுதான் தனியுரிமையாக இருந்திருந்தால் ஏன் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வீரர்கள்; தங்கள் உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டும், அவர்களால் வெகு சுலபமாக கண்ணில் கண்ட அனைவரையும் சுட்டுத் தள்ளியிருக்கலாமே. பெண்கள், குழந்தைகள், ஆடவர்கள் ஆகிய அனைவரும் பாதுகாப்பாக நிலத்தையும் அதேபோல சதுப்பு நிலப் பரப்பையும் கடந்து வருவதற்காக அந்த வீரர்கள் தொலைவிலிருந்து ஏன் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்?

ஸ்ரீலங்கா அரசாங்கம் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இவர்களின் மறுவாழ்வுக்காக செலவழித்துள்ளது. 11,700 எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் சரணடைந்தார்கள்... அவர்களைக் கொல்வதற்கான ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தால் இன்று அவர்கள் உயிரோடிருந்திருப்பார்களா? இவர்களில் 7969 பேர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 2879 பேர்கள் மறுவாழ்வு முகாம்களில் உள்ளார்கள். அந்த மறுவாழ்வு நடவடிக்கையில் கட்டிட நிhமாணத் தொழில், கைத்தொழில் வேலைகள், மற்றும் பூச்சு வேலைகள் போன்றவை தொழிற் பயிற்சியாகப் பயிற்றப்படுகின்றன. அதேபோல தொழிற்பயிற்சியுடன் அவர்களின் தொழிற்திறனையும், கல்வியறிவையும் வலுப்படுத்துவதற்காக மொழி மற்றும் தொடர்பாடல் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. எல்.ரீ.ரீ.ஈ அவர்களுக்கு எதைப் போதித்தது, கொலை செய்வதற்கு மட்டுமே.

2010ல் எல்.ரீ.ரீ.ஈ யினை வெற்றிகொண்ட ஒரு வருடத்தின் பின் மறுவாழ்வு அளிக்கப்பட்ட 400 எல்.ரீ.ரீ.ஈ பெண்போராளிகள் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டார்கள். 2011ல் 108 முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார்கள் அதேவேளை 50 விகிதத்திற்கும் அதிகமான மறுவாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள் 2010ல் நடந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வெற்றிகரமாக சித்தியடைந்தார்கள். கடந்த மாதம் (ஆகஸ்ட் 2011ல்) மறுவாழ்வு பயிற்சி பெற்ற 152முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் வவுனியா கலாச்சார நிலையத்தில் வைத்து அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டனர். 2010ல் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சடங்கில் வைத்து நூற்றுக்கும் மேலான முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் திருமண பந்தத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். வெளிநாட்டு அரசாங்கங்களாலும், திருட்டுத்தனமான நடவடிக்கையாளர்களாலும் உதவிகளைப் பெற்ற எல்.ரீ.ரீ.ஈ எனும் பயங்கரவாத அமைப்பினால் கொலையாளிகளாக மாற்றப்பட்ட ஆண்கள். பெண்கள், சிறுவர்கள் ஆகிய அனைவரையும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான சகல முயற்சிகளும் ஸ்ரீலங்காவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளையில், ஸ்ரீலங்காவிலிருந்து தப்பித்துச் சென்ற எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் இறந்து போயிருக்கும் ஒரு அமைப்பிற்கு உயிர் கொடுப்பதற்காக சுற்றி வருகிறார்கள் - தமிழ்நாடு அதன் பயிற்சித்தளமாக மீண்டும் மாறியுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த இலட்சியத் திட்டத்தின் எதிhகாலம் தமிழ் மக்களின் கைகளிலேயே உள்ளது. அவர்கள் தம்மைத்தாமே தீவிரமாக கேட்டுக் கொள்ள வேண்டியது அவர்கள் ஸ்ரீலங்கா வாசிகளா அல்லது இந்தியர்களா என்று. இந்தியர்கள் குறிப்பாகத் தமிழ்நாட்டிலுள்ளவர்கள் தங்களில் ஒரு பகுதியினர் என நினைத்து ஸ்ரீலங்காத் தமிழர்களை விரும்பக் கூடும். ஆனால் பின்னால்; இந்திய மீனவர்கள் ஸ்ரீலங்கா நீர்ப்பரப்பிற்குள் வருவதனால் எழும் பிரச்சனைகளின் விளைவாக அவர்களின் சொந்த மக்கள்மீதே அதிக ஒற்றுமை காண்பிக்கப்பட மாட்டாது. மீன்பிடி ஸ்ரீலங்காத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் வலுக்கட்டாயமாக ஸ்ரீலங்காவின் கரைகளுக்கு மீன்பிடிக்க வருகின்ற தமிழ்நாட்டு மீனவர்கள் தங்கள் சொந்த மக்களுக்கு நன்மையைக் காட்டிலும் அதிக தீமையையே செய்கிறார்கள். இதற்கு மேலாக தமிழர்கள் இந்தியாதான் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என நினைப்பார்களானால் இந்தியா அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதுதான் விவேகமானது. அவர்கள் இதயங்கள் இந்தியாவிலிருக்கும்போது அவர்கள் ஸ்ரீலங்காவில் வாழ்வதில் அர்த்தமேயில்லை.

அதேவேளை இதே தலைப்பை தமிழ் அரசியற்தலைவர்களிடமும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் எப்படிப் பேரம்பேசுவது என்று ஆலோசனைகளைப் பெற ஒவ்வொரு தடவையும் அவர்கள் இந்தியாவுக்கு விரைந்து கொண்டிருப்பதால் அவர்கள் முதலில் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என நினைவு படுத்துவது நல்லது. பாகுபாடு இடம் பெறுகிறது என்கிற கோஷம் எழுமானால், மேற்கிற்கும் இதனூடாகச சென்று பார்ப்பது நல்லது, ஏனெனில் சிலவேளைகளில் தமிழர்களால் கட்டப்பட்ட 200க்கும் மேற்பட்ட அடுக்கு மாடிகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளபோது அவர்களால் அதை சிங்களவர்களுக்கு வாடகைக்கு கொடுக்க முடியுமா என அவர்களிடம் கேட்டால், நிச்சயம் அவர்கள் வெளிப்படையாகச் சொல்வார்கள் அவர்களால் அதைத் தமிழர்களுக்கு மட்டும்தான் வாடகைக்கு கொடுக்க முடியும் என்று. இது மேற்கினால் சிங்களவர்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடாக இருக்க முடியாதுதான். இருந்தாலும் நாங்கள் புலம் பெயர்ந்தவர்களை இங்கு வந்து உதவிகளைச் செய்யும்படி கேட்பதில் ஆர்வமுள்ளவர்களாகக் காணப்படுகிறோம், இதே புலம் பெயர் சமூகம்தான் தங்கள் பிள்ளைகள் வெளிநாட்டுப் பாடசாலைகளில் கல்வி கற்றுக்கொண்டும் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டும் சுகமாக இருக்கும் அதேவேளை இங்குள்ள தங்கள் சொந்தத் தமிழ் மக்களை பாடசாலைக்குச சென்று கல்விகற்று வாழ்க்கையில் யாரோ ஒருவராக உயர்ந்த இடத்துக்கு வருவதை விடுத்து ஆயுதம் ஏந்த வேண்டும் என்று விரும்பியவர்கள்.

எங்கள் ஜனாதிபதி ஸ்ரீலங்காவிலிருந்து பயங்கரவாதத்தை அகற்றி விடுவதாக ஸ்ரீலங்கா மக்களுக்கு ஒரு வாக்குறுதியை வழங்கியிருந்தார். அந்த சுதந்திரத்துக்காக ராஜதந்திர முனைகளில் இருந்து வந்த புயல்கள் யாவற்றையும் அவர் தைரியமாக எதிர்கொண்டார். இன்று இந்த நாடு குண்டுத் தாக்கதல்களும் மற்றும் தற்கொலைத் தாக்கதல்களும் அற்ற ஒரு நாடாக மாறியிருப்பதை யாராலும் மறுத்துச் சொல்ல முடியாது. இதுதான் ஸ்ரீலங்கா மக்ககளுக்கு வேண்டியதும் மற்றும் எங்களுக்;கு வழங்கப்பட்டிருப்பதும். மற்றைய நோய்களைப் பற்றிக் கவனத்தில் எடுக்கவேண்டியது பிரஜைகளாகிய எங்களைப் பொறுத்தது. எல்.ரீ.ரீ.ஈ 30 வருடங்களாக ஆண், பெண், குழந்தைகள் என அப்பாவிகளைத் தாக்கியபோது உலகத் தலைவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்? அந்தக் குண்டுத் தாக்குதல்களின் போது வெளியிடப்படும் சாதாரண அனுதாபமான ராஜதந்திர அறிக்கைகளை விட எங்களுக்கு இன்னும் அதிகம் தேவைப்பட்டது. நாங்கள் இப்பொழுது அனுபவிக்கும் சுதந்திரத்தில் மேற்கிற்கு ஒரு பங்கும்கிடையாது. நாங்கள் கேட்கக்கூடியதெல்லாம் மேற்கு ஆக்கிரமிப்புச் செய்த நாடுகளை அவை மேலும் தண்டிக்க வேண்டாம் என்றே. அவர்கள் எல்லோரும் அப்பாவியான பொது மக்கள்.

அமெரிக்காவும் அதன் நேச அணியினரும் 2003ல் ஈராக்கில் ஒரு சர்வாதிகாரியின் ஆட்சிக்கு முடிவு கட்டுவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்கள். கடந்த 8 வருடங்களாக ஈராக்கிய மக்கள் சதாம் ஹ_சைனின் ஆட்சியிலிருந்ததை விட மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள். மற்றும் அமெரிக்கப் பொருளாதாரமும் முற்றாகச் சீர்குலைந்து போயுள்ளது. ட்ரில்லியன்கள் தொகையளவில் கடனில் சிக்கியுள்ள அமெரிக்கா உள்ளபடி மற்றவர்களைத் தட்டிக் கேட்கும் சர்வாதிகாரப் போக்கைத் தாங்க முடியுமா? இந்தப் பயணங்களுக்கான செலவினை ஒரு சிறு சேமிப்பில் போட்டு வைத்தால்கூட அமெரிக்காவை கடன்பளுவில் இருந்து காப்பாற்ற முடியும்.

தமிழில்: எஸ்.குமார்
(thenee.com)

No comments:

Post a Comment