Tuesday, September 20, 2011

ஜெனிவா புலி வியாபாரம் படு தோல்வி - புலிகோமாழிகள்!

Tuesday, September 20, 2011
ஜரோப்பாவில் ஒரு மில்லியன் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஜெனிவாவில் புலிகளின் அனைத்துலக செயலகப்பிரிவினர் ஜரோப்பிய தமிழர் தம்முடன் இருப்பதாக காட்ட ஒரு ஆர்பாட்டத்தை ஒழுங்கு செய்தனர். ஜரோப்பாவின் 8 நாடுகளில் இருந்து பஸ்களில் சென்றனர். ஆனால் பல பஸ்களில் 30 பேர் 40 பேர் அதிக பட்டம் 50 பேருக்கு மேற்படாமலே சென்றனர். ஒரு நாட்டில் இருந்து 01 பஸ் சகிதமே சென்றது. உண்மையில் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஆயிரத்தை தான்டவில்லை என கலந்துகொண்ட பொதுமக்கள் தெரிவித்தனர். 10 ஆயிரம் தமிழர் கலந்துகொண்டதாக தமிழ் இணையத்தளங்கள் புலுடாவிடுகின்றன. 10 ஆயிரம் தமிழர் கலந்துகொள்வதானால் 10 நாடுகளில் இருந்து முறையே ஆயிரம் தமிழர் போயிருக்க வேண்டும். ஆயிரம் தமிழர் ஒரு பஸ்சில் போகமுடியாது. ஆககுறைந்தது ஒரு நாட்டில் இருந்து 10 பஸ்கள் புறபட்டிருக்க வேண்டும். 10நாடுகளில் இருந்து 100 பஸ்களில் பொதுமக்கள் வந்திருக்க வேண்டும். பிரபாகரன் கற்பனையில் ஜரோப்பிய தமிழருக்கு தமிழீழம் காட்டியது போல புலத்திலும் தமிழ் இணையங்களும் புலி கொடிகளும் பிரபாகரனின் படத்தை காவும் கோமாழிகள் சிலரும் தமிழீழத்தை புலத்தில் 10 ஆயிரம் தமிழருக்கு காட்டிவிட்டதாக சுய இன்பம் காண்கின்றனர்

No comments:

Post a Comment